வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 7

நெடுநல்வாடை அரிய செய்தி  : 7
தனிமைத் துயர்
பணைநிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
                                              நக்கீரர், நெடுநல் .  7: 93 -94
கத்திரிகையால் மட்டம் செய்யப்பெற்ற பிடரி மயிரைக்கொண்ட குதிரைகள், தாம் கட்டப்பட்டுள்ள கட்டுத்த்றிகளில் நிற்பதை வெறுக்கின்றன, அவை, புல்லாகிய உணவைத் தின்று, குதட்டும்போது ந்ந்ற்படும் ஒலி, கேட்போர்க்குத் தனிமைத் துயரை மிகுவிப்பதாய் இருக்கும். மன்னனைப் பிரிந்து தனிமையில் வாடும் அரசியின் வாடை வருத்தும்.
 காமக்கிளர்ச்சியின் குறியீடாகக் குதிரை இடம்பெறுவதை இன்றுங்
காணலாம்.
( பணை – பந்தி ; உளை – பிடரி ; புல் உணா- புல்லாகிய உணவு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக