செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 4

நெடுநல்வாடை அரிய செய்தி  : 4

மாலைக் கால வழிபாடு
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழ பொழுது அறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கை தொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர
                                             நக்கீரர், நெடுநல் .  7:  40 – 44
                              மகளிர், பசுமையான காம்புகளைக்கொண்ட செம்முல்லையின் அரும்புகளை, அழகிய பூந்தட்டுக்களில் இட்டு வைத்திருப்பர், அவை மலர்ந்து மணம் வீசுவதைக்கொண்டு, மாலைக்காலம் வந்தமையை அறிவர். இவ்வந்திப் பொழுதில் இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துவர், நெல்லையும் மலரையும் தூவிக் கைகூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுவர், வளம் நிறைந்த ஆவண வீதிகளில் மாலைக் காலம் இவ்வாறு கொண்டாடப்பட்டது.
( போது – அரும்பு,  மலர்ந்து பொழுதை அறிவிக்கும் ; பிடகை – பூந்தட்டு ;  பித்திகை – பிச்சி , செம்முல்லை ; ஆவணம் – அங்காடித் தெரு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக