வியாழன், 14 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 34

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 34
பாண்டியன் பெருங்கொடை
வரையா வாயின் செறாஅது இருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
                 மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  748 -752
மன்னன் அவைக்களத்து, வாயிலில் தடுத்து நிறுத்தாமல், இவர்களைப் போல் வரும் படையாளர் முதலியோரும் வருவாராக என்று கூறி, முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் எளிமையாய் இருந்து, கவிதையாகிய  புது வருவாயை உடைய புலவர்களுடன், பாணர் வருவாராக, பாடினியர் வருவாராக என அழைத்து, அவர்கள் சுற்றத்தாராய், அவர்களால் பாதுகாக்கப்படும் பெரிய இரவலர்க்கெல்லாம்’ நீவிர் யாவிர்’ என அவர்களைக் கேளாமல், அவர்கள் காட்டிய அளவினைக்கொண்டு, கொடுஞ்சி உடைய நெடிய தேர்களை யானைகளோடும் கொடுத்தனன்.
( யாணர் – புது வருவாய் ; பாட்டியர் – பாடினி ; கொடுஞ்சி – தேர்த்தட்டின் முன்னே கட்டப்பட்ட  தாமரைப் பூ  - குஞ்சம்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக