புதன், 20 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 5

நெடுநல்வாடை அரிய செய்தி  : 5
கணப்புச் சட்டி
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர
                                 நக்கீரர், நெடுநல் .  7:  62 – 64
                               வாடைக்காற்று இப்பருவத்தில் ’கல்’ என்ற ஓசையுடன் எங்கும் மழைத் துளிகளைத் தூவிற்று, இளையரும் முதியரும் குவிந்த வாயினை உடைய நீருண் கலத்தில் இருக்கும் தண்ணீரை, நீர் வேட்கையின்மையால், பருக விரும்புவதில்லை, அவர்கள் உடல் குளிர்ச்சியைப் போக்க, பிளந்த வாயினை உடைய நெருப்புக்குண்டத்திலிருந்து ( கணப்புச் சட்டி) வெளிப்படும் தீயின் வெம்மையை நுகர்ந்தனர்.
(கன்னல் – கரகம், வட்டில்  ; தடவு ; குண்டம், தூபமூட்டி.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக