ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 9

நெடுநல்வாடை அரிய செய்தி  : 9
தாலி
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழ ….
                                            நக்கீரர், நெடுநல் .  7: 136 – 137
அரசமாதேவியின், முத்துக்கள் பதித்துச் செய்யப்பட்ட, கச்சுத் தாங்கிய பருத்த முலையைக் கொண்ட மார்பில், குத்தும் தன்மையைக் கொண்ட நீண்ட தாலி நாண் ஒன்று மட்டுமே தொங்கிக் கிடந்தது.
’பின் அமை நெடு வீழ் தாழ’ என்பதற்குப் பின்னுதலைக் கொண்ட கூந்தல் மார்பில் சரிந்து கிடக்க – எனவும் பொருள் கொள்வர்.
( ஆரம் – முத்துகள் கச்சு ; ஆகம் மார்பு ; பின் – பின்னுதல் / குத்துதல் ; வீழ் தாலி, மார்பில் தொங்குவதால் .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக