புதன், 13 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 33

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 33
கஞ்சியூட்டிய ஆடை
சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
                       மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 721 – 722
பாண்டியன் நெடுஞ்செழியன் – ஆடை அணிகலன் பொலிய…
சோறு ஆக்கிய நீராகிய கஞ்சி ஊட்டிய துகிலை அணிந்து , அதன் மேல்  அணிகலன்கள் பொலியப்பூட்டி அழகுற விளங்கினான்
ஆடைகளுக்குக் கஞ்சியூட்டி அணியும் வழக்கம் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம்.
( சோறு அமைவுற்ற நீர் – கஞ்சி ; கலிங்கம் – ஆடை) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக