சனி, 2 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 23

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 23
காவிதி மாக்கள்
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
                        மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  496 – 499
 அரசனிடம் உள்ள நன்மைகளையும் தீமைகளையும் மனத்தால் கண்டு, அத்தீங்குகளை ஆராய்ந்து அவற்றில் ஒழுகாமல் அடக்குபவர்.  சுற்றத்தாரிடம் செல்லும் அன்பும், எல்லா உயிர்களிடத்தும் நிகழும் அறமும், எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காமல் பாதுகாப்பவர், பழி தம்மிடம் வராமல் நீக்கி, அதனால் ஏனையோரினும் உயர்ந்து விளங்குபவர். பரவிய புகழால் நிறைந்தவர் – விளங்குகின்ற மயிர்க்கட்டுக் கட்டி, அரசனால் தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்.
(முடியுடை வேந்தர்க்கு மகட்கொடை நேரும் வேளாளரை நச்சினார்க்கினியர், ‘ பாண்டி நாட்டில், காவிதிப்பட்டம் எய்தினோரும்” எனக் குறிக்கின்றார். காவிதிப் பூ – இப்பட்டத்திற்கு அணியும் பூ ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக