வியாழன், 2 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 448

திருக்குறள் – சிறப்புரை : 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். – ௪௪௮
மன்னன், தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யுமிடத்து அவனை இடித்துரைத்து அறவழியில் ஆற்றுப்படுத்தும் சான்றோர் இல்லையெனில் அவனை அழிப்பதற்குப் பகைவர்கள் இல்லை என்றாலும் தானே அழிவான்.
“ மாசற்ற  நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிது என்க…….:” நன்னெறி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக