செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :459

திருக்குறள் – சிறப்புரை :459
மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. --- ௪௫௯
மனநலம் நன்கு உடையர் இறந்தபின்னும் புகழ்பெற்று மறுமை இன்பத்தை அடைவர் ; அவ்வின்பமும் நல்லின நட்பால் நிலைபேறு பெரும்.
“ஈண்டுச்செய் நல்வினை ஆண்டுச் சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன். ‘’ ……. புறநானூறு.
.

மலையமான்…….. இவ்வுலகத்தில் செய்த நல்வினையின் பயனை உயர்ந்தோர் உலகத்துச் சென்று நுகரும் பொருட்டுப் போயினன்.

1 கருத்து: