வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :456

திருக்குறள் – சிறப்புரை :456
மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. -- ௪௫௬
மனத்தின்கண் தூய்மை உடையவருக்கு மனைவி, மக்களாகிய வழித் தோன்றல்கள்  சிறப்பாக அமைவர் ; அவருக்கு நல்லவர்தம்  தூய நட்பு கிடைக்குமாயின் நன்மைதராத செயல் என்று எதுவுமே இல்லை.
“ ஒருவர் பொறை இருவர் நட்பு” --- பழமொழி
 ஒருவர் பொறுமை இருவர்க்கும் நட்பாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக