வியாழன், 9 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :455

திருக்குறள் – சிறப்புரை :455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். ---- ௪௫௫
மனத்தூய்மையும் செய்யும் தொழில் தூய்மையும் ஆகிய இவ்விரண்டும்  தான் சேர்ந்த இனத்தின் தூய்மையைத் துணையாகக் கொண்டு வெளிவரும்.
”இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்ச மூலம்.
மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் , நற்சேர்க்கையால் புகழும்  மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக