சனி, 11 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :457

திருக்குறள் – சிறப்புரை :457
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். --- ௪௫௭
 மனநலமே உயிருக்கு ஆக்கம் தரும் அரிய செல்வமாகும் ; சேரத்தகுதி உடையவரோடு சேரும் இனநலம்,  எல்லாவகையான பெருமைகளையும், நில்லா உலகில் நிலைத்த புகழையும் தரும்.
“ இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
 உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை “ ----புறநானூறு.
இந்த அகன்ற உலகத்தில் புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர்நிலை உலகை அடைதல் இயலாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக