செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :473

திருக்குறள் – சிறப்புரை :473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். --- ௪௭௩
தம் வலிமை அறியாது வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இடையிலேயே தோல்வியைத் தழுவியோர் பலராவர்.
“செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
 எய்யாமையோடு இளிவு தலைத் தரும்… --- நற்றிணை.

தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது,இழிவைத் தருவதோடு, அறியாமையையும் வெளிப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக