ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :464

திருக்குறள் – சிறப்புரை :464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் ----- ௪௬௪
இழிவு என்னும் கேடு அடைய விரும்பாத அறிவுடையார் தன் அறிவுக்குத் தெளிவுதராத எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டார்.
“ விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு
  உரையாமை செல்லும் உணர்வு”.” ---சிறுபஞ்சமூலம்.
பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கிற விதை போலப் பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக