ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :471

திருக்குறள் – சிறப்புரை :471
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். --- ௪௭௧
ஒருவன், தான் செய்யக்கருதும் செயலின் தன்மையையும் தன்முயற்சியின் வலிமையையும் எதிர்ப்போர் வலிமையையும் இருவர்க்கும் துணையாக நிற்போர் வலிமையையும் ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்.
“நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கள்
துனிஅஞ்சார் செய்வது உணர்வார்…..” – பழமொழி.

செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார்  அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்சார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக