திங்கள், 27 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :472

திருக்குறள் – சிறப்புரை :472
ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். – ௪௭௨
தன் ஆற்றலுக்கு ஏற்ற செயலையும் அதனைச் செய்து முடிப்பதற்கு உரிய வலிமையினையும் அறிந்து, அச்செயலில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்க்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
“ அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக் கொண்டு
 ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார்
பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து ஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார்” --- நீதிநெறிவிளக்கம்.
ஆகுலம் – மனக்கலக்கம் ; ஒல்லாதார் – பகைவர் ;
உலம்புப – ஆரவாரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக