புதன், 8 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :454

திருக்குறள் – சிறப்புரை :454
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளதாகும் அறிவு. – ௪௫௪
 ஒருவனுடைய அறிவு அவன் மனத்தினின்று வெளிப்பட்டது போலத் தோன்றி அவனை அறியாமலேயே அவன் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப அமைந்துவிடும்.
“ எனைத் துணையவேணும் இலம்பட்டார் கல்வி

  தினைத் துணையும் சீர்ப்பாடு இலவாம் ..”  - நீதிநெறிவிளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக