திங்கள், 20 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :465

திருக்குறள் – சிறப்புரை :465
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
 பாத்திப் படுப்பதோர் ஆறு. ௪௬௫
போர்முகம் புகுமுன் அதனால் விளையும் நன்மை தீமைகளை முற்று முழுதாக ஆராயாமல் செயலில் இறங்குவது பகைவரை அவர்தம் நிலத்திலேயே நிலைபெறச்செய்த வழியாம்.
“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.” –குறள். 676

ஒரு செயலை முடிக்கும் வகையும் வரக்கூடிய இடையூறும் முடிக்கும்போது கிடைக்கும் பெரும் பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செயல் புரிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக