தமிழமுது -18
- சங்க இலக்கியம் _ கடவுள் கோட்பாடு.
தொன்மைத்தமிழரின் வாழ்வியலை அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியங்கள்
துணைபுரிகின்றன. சங்க காலச் சமுதாயம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்களின் பண்பாடு செழிப்புர்றுச்
சிறந்திருந்தது என்பதை வரலாரு, இலக்கியங்கள், அகழாய்வுகள் இன்ன பிற சான்றுகள் வழி அறியமுடிகிறது.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பழந்தமிழரின் வாழ்வியலை
வெகுச் சிறப்பாக விளக்கியுள்ளன. இவ்விலக்கியங்கள்
ஒரு காலத்தில் ஒருவரால் எழுதப்பட்டவையல்ல. பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால்
எழுதப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பெற்றவையாகும். இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறுவதற்குமுன்
பன்னெடுங்காலம் வாய்மொழியாக வழக்கத்திலிருந்து
பின்னர் எழுதப்பட்டவையாகும்..
பண்டைத்
தமிழர்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். இயற்கையின் அளப்பரிய ஆற்றல்களைக்
கண்டுணர்ந்த தமிழர்கள் அவ்வாற்றல்களையே தெய்வமாகப் போற்றி வழிபட்டனர்.
”கடவுள் பற்றிய கருத்துருவம் காலந்தோறும் மாறுபட்டு வருகின்றது. கடவுள்
போன்ற நுண்பொருள் (Object concept ) எவ்வாறு புலனீடான (concrete) சொல்லாயிற்று.கடவுளின்
உருவ அமைப்பு, கடவுள் ஏற்கும் கருவிகள், உளவியல் அடிப்படையில் ஏற்படும் பொதுக்குறியீடு
(Symbol) இலிங்கம்,வேல், மயில், முதலியன ஆய்வுக்குரியனவாகும்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக