வெள்ளி, 23 மே, 2025

தமிழமுது -35 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன் .

 

தமிழமுது -35 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன் .

பத்துப்பாட்டு – தொடர்ச்சி…!

9.) பட்டினப்பாலை:

 கரிகால் பெருவளத்தான் புகார் நகரில் இருந்த கோயில், குளங்கள் இந்நூலில் சுட்டப்படுகின்றது. நகர் வாழ்வில் வைதிகக் கலப்புத் தெரிகிறது. எனினும் தமிழர்களுக்கே உரிய வழிபாட்டில் பரதவர்கள் (நெய்தல்,) சினைச் சுறாவின் கோடு நட்டு வழிபட்டனர்.  முருகனுக்கு வெறியயர்தல் குறிக்கப்படுகிறது.

 

 10.) மலைபடுகடாம்:

முருகனுக்குக் குறவர் குரவை அயர்தல் ; மலை வழிபடுவார் குறிஞ்சிபாடிக் கை தொழுது பரவிச் செல்லுதல், நாட்காலையில் கள் குடித்த குறவர்கள் தம் மனைவியருடன் கூடி , மான் தோல் போர்த்த சிறு பறையைக் கல் என்னும் ஓசை உண்டாகுமாறு அடித்து வானத்தைத் தீண்டும் உச்சி மலையில் ஆடும் குரவைக் கூத்தின் ஆரவாரமும் ஒலிக்கும். பண்டைத் தமிழர் பாடலும் ஆடலுமாக இறைவனை வழிபட்டனர்.

 

எட்டுத்தொகை நூல்கள் :

………………………..தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக