தமிழமுது -35 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முருகன் .
பத்துப்பாட்டு – தொடர்ச்சி…!
9.) பட்டினப்பாலை:
கரிகால் பெருவளத்தான் புகார் நகரில் இருந்த கோயில், குளங்கள்
இந்நூலில் சுட்டப்படுகின்றது. நகர் வாழ்வில் வைதிகக் கலப்புத் தெரிகிறது. எனினும் தமிழர்களுக்கே
உரிய வழிபாட்டில் பரதவர்கள் (நெய்தல்,) சினைச் சுறாவின் கோடு நட்டு வழிபட்டனர். முருகனுக்கு வெறியயர்தல் குறிக்கப்படுகிறது.
10.) மலைபடுகடாம்:
முருகனுக்குக் குறவர் குரவை அயர்தல் ; மலை வழிபடுவார்
குறிஞ்சிபாடிக் கை தொழுது பரவிச் செல்லுதல், நாட்காலையில் கள் குடித்த குறவர்கள் தம்
மனைவியருடன் கூடி , மான் தோல் போர்த்த சிறு பறையைக் கல் என்னும் ஓசை உண்டாகுமாறு அடித்து
வானத்தைத் தீண்டும் உச்சி மலையில் ஆடும் குரவைக் கூத்தின் ஆரவாரமும் ஒலிக்கும். பண்டைத்
தமிழர் பாடலும் ஆடலுமாக இறைவனை வழிபட்டனர்.
எட்டுத்தொகை நூல்கள் :
………………………..தொடரும்…………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக