தமிழமுது -19
- சங்க இலக்கியம் _ கடவுள் கோட்பாடு.
தொல்தமிழர் வழிபாடு:
அறிவால்
அறிந்த ஒன்றைப் போற்றுவது மனித இயல்புதான். தன் வாழ்க்கைக்குத் துணையாவது ; வளம் தருவது
; நலம் பயப்பது ; உயிருக்கும் உடைமைக்கும் அச்சம் விளைவிப்பது இன்னபிற இயற்கை ஆற்றல்களை
மனிதன் போற்றினான் ; வாழ்த்தினான் இந்நிலையே வழிபாடாக மாறியது.
காலம் மாற்றத்தைக் கற்பித்தது. சமயம், மதம் கடவுள் சார்ந்து தோன்றின. பழைய
பெளத்தம் கடவுள் சார்பர்ற மனித வாழ்க்கையைக் குறித்தது. கடவுள் வழிபாட்டில் சமயங்கள்
வேறுபடுகின்றன.வைதிக சமயம், சமணசமயம், பெளத்த சமயம் ஆசிவக சமயம் இன்னபிற சமய நெறிகள்
தமிழர் வாழ்வில் ஊடுருவியிருந்தன. ஆனால் தமிழ்ச் சமுதாயம் அவற்றை முர்றாக ஏற்றுக்கொள்ளவில்லை.
சங்கத்தமிழரின்
கடவுள் கோட்பாடு அறக்கோட்பாடாக இருந்ததைக் காணமுடிகிறது. சங்க காலம் சமயத்தைத் தழுவாத
இயற்கை நெறிக்காலம். அகத்திணைக் காதல் நெறி (இல்லறம்) உயிராகப் போற்றப்பட்டது. சமயம்
சாராப் பொதுமை அறங்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்கத்தமிழர் காடு, மலை, இயற்கை
வளங்கள் ஆறுகள், சோலைகள் முதலியவற்றைத் தெய்வங்களாக வழிபட்டனர்.
தொல்காப்பியம்:
தொல்காப்பியத்தில் வேதப்பண்புகள் தோய்ந்திருக்கின்றது. சங்க இலக்கியங்களில்
வேதப் பண்புகளோடு இதிகாசக் கதைகளும் விரவி வருகின்றன. தொல்காப்பியர் மாயோன், சேயோன்,
வருணன், வேந்தன் என்னும் நிலத் தெய்வ வழிபாடுகளையும் கொற்றவை வழிபாட்டினையும் எடுத்துக்கூறியுள்ளார்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக