வியாழன், 8 மே, 2025

தமிழமுது -23 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.நடுகல்

 

தமிழமுது -23 - கடவுள் கோட்பாடு - தொல்தமிழர் வழிபாடு.நடுகல்


”விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

எழுத்துடை நடுகல் ….. “ ஓதலாந்தையார், ஐங்குறுநூறு,352 1-2.


 விழுகிய அம்பு தொடுத்தலையுடைய மறவர், தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை விரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல் குறித்துப் பேசுகிறது ஐங்குறுநூறு.

நடுகல் குறித்த செய்திகளை மேலும் புறநானூறு, பட்டினப்பாலை நூல்களிலும் காணலாம்.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக  நடப்பட்ட  கற்களைப் பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன்கண்ணகிக்கு நடுகல் நட்டுக் கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.  பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.  


நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனைப் பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.


“ கல்லே பரவினல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும். “

 

வெறியாட்டு :      

 

……………….தொடரும்……………………………..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக