ஞாயிறு, 18 மே, 2025

தமிழமுது -30 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன்—அறுபடைவீடு.

 

தமிழமுது -30 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன்அறுபடைவீடு.


4.)         திரு ஏரகம்  - அந்தனர் என்போர்.

 

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி

அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல. “ 177 – 182.

 

 ஓதல் முதலிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல், உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப் பிறப்பினராய்  நாற்பத்தெட்டு ஆண்டுகள் நல்ல இளமைக் காலம் முழுவதும்  வேதம் கூறும் வழியில் பிரமசரியத்தைக் கைக்கொண்டு கழித்தவர்களும் , அதன்பின் இல்லற வாழ்க்கையில் பயின்ற கோட்பாட்டினை உடையவர்களும் மூன்றுவித வடிவுடைய குண்டத்தில்  மூன்று வகைத் தீயால் உண்டாக்கிய செல்வத்தையும் , இரு பிறப்பினையும் உடைய அந்தணர்கள், தாங்கள் வழிபட வேண்டிய முக்காலமும் அறிந்து பூணூலையும் புலராத ஆடையையும் அணிந்துகொண்டு தலைமேல் குவித்த கையினராய் முருகப் பெருமானைப் புகழ்ந்து துதித்து, சரவணபவ என்னும் வேத மந்திரத்தை நாவால் பலமுறை ஒலித்து வழிபட…!


( திருவேரகம் – இதனை மலை நாட்டகத்தொரு திருப்பதி என்றார் நச்சினார்க்கியர் ; அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்பார்,)

………………………….தொடரும் ……………………………….

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக