தமிழமுது -30 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
முருகன்—அறுபடைவீடு.
4.) திரு ஏரகம் - அந்தனர் என்போர்.
”இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த
முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல. “ 177 – 182.
ஓதல்
முதலிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல், உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப்
பிறப்பினராய் நாற்பத்தெட்டு ஆண்டுகள் நல்ல
இளமைக் காலம் முழுவதும் வேதம் கூறும் வழியில்
பிரமசரியத்தைக் கைக்கொண்டு கழித்தவர்களும் , அதன்பின் இல்லற வாழ்க்கையில் பயின்ற கோட்பாட்டினை
உடையவர்களும் மூன்றுவித வடிவுடைய குண்டத்தில் மூன்று வகைத் தீயால் உண்டாக்கிய செல்வத்தையும் ,
இரு பிறப்பினையும் உடைய அந்தணர்கள், தாங்கள் வழிபட வேண்டிய முக்காலமும் அறிந்து பூணூலையும்
புலராத ஆடையையும் அணிந்துகொண்டு தலைமேல் குவித்த கையினராய் முருகப் பெருமானைப் புகழ்ந்து
துதித்து, சரவணபவ என்னும் வேத மந்திரத்தை நாவால் பலமுறை ஒலித்து வழிபட…!
( திருவேரகம் – இதனை மலை நாட்டகத்தொரு திருப்பதி என்றார்
நச்சினார்க்கியர் ; அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்பார்,)
………………………….தொடரும் ……………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக