சனி, 24 மே, 2025

தமிழமுது -36 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன் . வழிபாடு.

 

தமிழமுது -36 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு

முருகன் . வழிபாடு.

 

எட்டுத்தொகை நூல்கள் :

1.)     நற்றிணை:

 இந்நூலில், 12, பாடல்களில் முருகன், வேலன், வெறியயர் களம் இடம்பெற்றுள்ளது. “வழிபடு தெய்வம் கண்கண்டாங்கு “ எனவரும் நற்றிணை உவமை தனக்கென ஒரு குடியினர் ஒரு தெய்வத்தை வரையறுத்து வணங்கிய பழக்கத்தைக் குறிக்கிறது.

2.)     குறுந்தொகை:

இந்நூலில், 5, பாடல்களில் முருக வழிபாடு பர்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளது. முருகு உறையும் குன்றம் போற்றல், வேலனை அழைத்து வெறியயர்தல், முருகனை ‘பெருந்தெய்வம்’ என இந்நூல் சுட்டும்.”பார்ப்பன மகனே பார்ப்பன மகனே” என்னும் பாடல் தமிழர் வைதிகச் சமய நெறிக்கு மாறான நெறியினர் என்பதைக் காட்டுகிறது.

 

3.)     ஐங்குறுநூறு:

இந்நூலில் 12, பாடல்களில்  முருகவழிபாடு சுட்டப்படுகிறது. மனையுறை கடவுள் , குல முதல்வன் முருகன். குறவர்களின் குல முதலாகக் கருதப்பட்டான். முருக வழிபாடு குறித்து நடுகல் வழிபாடும் கூறுகிறது.

4.)     பரிபாடால் :

இந்நூலில் 24 , பாடல்களில் தெய்வ வழிபாடு குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. “திருமாலுக்கு – 7 ; முருகனுக்கு – 8 ; வையைக்கு -9.  அரசரைப் போற்றி வழிபாடு செய்து கொண்டிருந்த நிலையிலிருந்து தெய்வத்தைப் போற்றிப் பரவும் நிலையை இந்நூலும் திருமுருகாற்றுப்படையும் தெளிவாகக் காட்டுகின்றன. சமயநிலைக்காலம் நோக்கி இலக்கியப்புனைவு நகர்தலை இந்நூல்வழி காணலாம். உலகத்தோற்றம், தெய்வத் தோற்றம் பற்றிய புராணக் கதைகள், தேவர், அசுரர், பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன. வைதிகச் சமயக் கருத்துகளின் தாக்கத்தை இந்நூலில் காணலாம் , முருகன் பிறப்பு முற்றிலும் புராணத்தைத் தழுவி உரைக்கிறது.

………………………..தொடரும்…………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக