திங்கள், 26 மே, 2025

தமிழமுது -38 - கடவுள் கோட்பாடு –தொல்தமிழர் வழிபாடு முருகன், வழிபாடு.

 

தமிழமுது -38 - கடவுள் கோட்பாடுதொல்தமிழர் வழிபாடு எட்டுத்தொகை நூல்கள் :

7) .அகநானூறு:

இந்நூலில் 21 இடங்களில் முருகனைப்பற்றிய குறிப்புகள் டம்பெற்றுள்ளன.

 

முருகனுக்குரிய பொதியமலை,  , முருகன் பரங்குன்றம் முதலிய  செய்திகளும் கடவுளை வாழ்த்தி வேண்டல், தெய்வங்களுக்குப் பலியிடல், பிறை தொழுதல், கதிரை வணங்குதல் இன்னபிற செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

கொல்லிப்பாவை வழிபாடு :

வெல்லும் வேல், கொல்லும்படையுடைய சேரன் கொல்லிமலை, அருவி நீர் உடைய மலையின் அகன்ற இடம் அழகுற தெய்வமாக அமைந்த கொல்லிப்பாவை . – அககநானூறு – 62.

வெறியாட்டுக் களம் :

 தாயானவள் தலைவியின் நோய் நீக்க, முதுமை வாய்ந்த பொய்கூறல் வல்ல கட்டுவிருச்சியராகிய பெண்டிர், பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்று கூறலின் அதனை வாய்மையாகக் கருதி அத்தெய்வத்திற்குப் பூசனை செய்தனர். அகம் – 98.

முருகன் – சேயோன்:

முருகக் கடவுள் மிக்க செந்நிறம் உடையவர் என்பது சேய் , செவ்வேல்  என்னும் பெயர்களாலும் பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு, பவழத்தன்ன மேனி  என்பவற்றாலும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும் அவ்வானத்தை ஒட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பில் அணிந்த முத்தாரமும் உவமமாயின. – அகம். 120.

எழுத்துடை நடுகல்:

நிரை மீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக்கொண்ட நடுகல்லை வழிபட்டனர் . அகம்–131. -   மேலும் காண்க:,    179. -269, -297.

நெடியோன் முருகன் :

“ ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து. :” –அகம் . 149.

முருகன் பரங்குன்றம், நெடியோன்  முருகனை நெடியவன் என்பார் நச்சினார்க்கினியர்.

சிவனை வழிபடல்  ;

நான்மறை முதுநூல் முதல்வன் முக்கண் செல்வன் ”- உலகம் யாவும் போற்றும் நல்ல புகழை உடைய நான்கு வேதங்களைக்கண்ட பழம்பெரும் நூலைத் தந்தருளிய மூன்று கண்களை உடைய சிவபெருமானை வழிபடும் சிறப்பினை உடையது சோழநாட்டில் உள்ள ஆலமுற்றம் எனும் ஊர்,

திருமால் வழிபாடு :

 

‘நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்” –அகம் . 175.

நிரம்பிய ஆரங்களைக்கொண்ட சக்கரப் படை யுடைய திருமால் வழிபாடு குறிக்கப்பட்டுள்ளது.

கதிரைத் தொழுதல் :

“பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு.. அகம் – 298.

உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பல கதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பலவகை தொழில்களைத் தருமாறு வலமாக எழுந்து, நீர்முக்க் கடலிலே தோன்றினாற்போல…… !  வாழ்த்தி வணங்கினர் என்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக