தமிழமுது -39 - கடவுள் கோட்பாடு
–தொல்தமிழர் வழிபாடு
சிவன், முருகன், பலராமன்,
கண்ணன்.
. எட்டுத்தொகை நூல்கள் :
8புறநானூறு.
”தமிழ்நாட்டில், குறிஞ்சி நில மக்களுக்கு முருகக் கடவுளும் ; முல்லை நில
மக்களுக்குத் திருமாலும் ; மருத நில மக்களுக்கு இந்திரனும்
; நெய்தல் நில மக்களுக்கு வருணனும் தெவங்கள் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.”
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப்படும்
கடவுளர் நால்வர்.
“ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்லிசை நால்வர்.” - நக்கீரர் பாடிய
புறநானூறு 56 ஆம் பாடல் :
1). இடபக்கொடியும் கிணச்சிப் படையும் மணிமிடறும்
உடைய –சிவபெருமான்.
2). வால்வளை மேனியும் கலப்பைப் படையும் பனைக்கொடியும்
உடைய பலராமன்.
3). நீலமணிஒக்கும் மேனியும் கலுழக் கொடியும்
உடைய கண்ணன்.
4.) மயிலாகிய கொடியும் மயில் ஊர்தியும் உடைய
முருகவேள்.
இந்நால்வரும் உலகத்தைப் புரப்பாராகக்
கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியச் சமுதாயம்
சமயம் என்னும் சொல் வழக்கைப் பெறவில்லை. மதம் என்ற சொல் கோட்பாடு அறிவு, செருக்கு எனப்
பல பொருள் தருகிறது. சமுதாயம் முழுமையும் மக்கள்
நம்பிய நெறிகள் வழிமுறையாகப் பெற்று வந்தவையே.
இயற்கை வடிவினை எல்லாம் தெய்வம் உரையும் நிலையாகக்
கண்டனர். எவையெல்லாம் அவர்க்கு அருளும் மருளும் பயந்தனவோ அவையெல்லாம் தெய்வமாயின. தத்தம்
நிலச் சூழலுக்கேற்ப வாழ்வியலோடு தொடர்புடைய தெய்வங்களை வணங்கினர்.
தெய்வங்களிடம் காதலுக்குத்
துணையாக, நோய் தணிக்க, மழை பொழிய, விருந்து பெற வேண்டினர்.
சிவன்,
பலராமன் நிலத் தொடர்பின்றி பொதுநிலையில் கூறப்பெற்றுள்ளனர். மரங்களிலும் மலைகளிலும்
பண்புமிக்க தெய்வம் உண்டென்பது பண்டையோர் நம்பிக்கை. தினைப்புனத்தே முதலில் விளையும்
கதிர்களைத் தெய்வத்திற்கெனவிடுதல் மரபாகும். கூற்றம் அச்சம் தரும் கடவுளாகக் கருதப்பட்டது.
பென்ணின் பெருங்கற்பு கடவுள் கற்பெனப்பட்டது.
காடுகிழாளாகிய கொற்றவையும் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனும் தமிழ் நிலத்தின் தொன்மைத்
தெய்வங்கள்.
சங்க இலக்கியங்களில்
தெய்வம் என்ற சொல் வணங்கிக் கொள்ளும்
உருவையும் ; கடவுள் என்பது உள்நிறை ஆற்றலையும் குறிப்பதாகக்கொள்ளலாம். கல்லிலும் மலையிலும்
மரத்திலும் வானமீனினும் வேள்வித் தீயிலும் கடவுள் பொருந்தியிருப்பதாகக் (பதிற்றுப்பத்து)
கண்டனர்.
முருகன், சிவன், கொற்றவை:
……………………………தொடரும்……………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக