வெள்ளி, 2 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 398

திருக்குறள் – சிறப்புரை : 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. -398
ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்வியறிவு, அவன் தோற்றும் தன் தலைமுறைக்கும் தொடர்ந்துவந்து பாதுகாவலாக அமையும்.
“ கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
 பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் – முற்றத்
 துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்
 இறந்த எலாம் துன்பம் அலாது இல்.” – நீதிநெறி விளக்கம்.

(இறந்த எலாம் – ஏனையவை எல்லாம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக