ஞாயிறு, 18 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 408

திருக்குறள் – சிறப்புரை : 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. – 408
கற்றறிந்த சான்றோர்களிடத்துத் தோன்றிய வறுமை தரும் துன்பத்தைவிட மிகவும் கொடிய துன்பம் தருவது கல்வியறிவு இல்லாதவர் கையில் சேர்ந்த செல்வம்.
“ பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.”………….. நல்வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக