செவ்வாய், 20 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 410

திருக்குறள் – சிறப்புரை : 410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். – 410
சிறந்த நூல்களைக் கற்று விளங்கிய அறிவோடு  திகழும் கற்றறிந்தாரோடு ஒப்புநோக்க கல்வியறிவினால் அறிவை விரிவு செய்யாதார் பகுத்தறிவற்ற விலங்கினத்திற்கு ஒப்பாவர்.  

“முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
 கனிவினும் நல்கார் கயவர் ~ நனிவிளைவு இல்
 காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
 ஆயினும் ஆமோ அறை.” ~~ நன்னெறி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக