புதன், 21 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 411

திருக்குறள் – சிறப்புரை : 411
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 411
செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம் செவியால் கேட்டுணரும் கேள்விச் செல்வமே ; அச்செல்வமே தேடிப் பெறும் செல்வங்களுள் முதன்மையானது.
“ கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்
 மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற
 முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே

 அழகுக்கு அழகு செய்வார். ~~~ நீதிநெறி விளக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக