சனி, 24 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 414

திருக்குறள் – சிறப்புரை : 414
கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414
ஒருவன் முறையாகக் கல்வி கற்கவில்லை யென்றாலும் கற்றறிந்தார் ஆற்றும் உரைகளைச் செவிமடுத்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் ; அஃது அவனுக்குத் தாழ்வு வந்துற்றகாலை ஊன்றுகோல் போன்று துணை நிற்கும்.
“ நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற

 நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு…….  வாக்குண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக