ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 415

திருக்குறள் – சிறப்புரை : 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415
வழுக்கி விழும் நிலையில் காப்பாற்றும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் இன்னல் வந்துற்றபோது  மனத்தளர்வைப் போக்கும் மாமருந்தாகும் ஒழுக்கம் நிறைந்த உத்தமர்தம் வாய்ச்சொல்.
கற்றவராயினும் ஒழுக்கமில்லாதார் அறிவுரை கூறத் தகுதியற்றவர் என்பதறிக.
“கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்கு உண்டு ஓர் வலி உடைமை ~ சொற்ற நீர்
 நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்

சொல்லாமே சூழ்ந்து சொலல். ….. நீதிநெறி விளக்கம்.

1 கருத்து: