செவ்வாய், 6 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 401

திருக்குறள் – சிறப்புரை : 401
கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.- 401
கற்க வேண்டிய நல்ல நூல்களைக் கற்காத ஒருவன் சான்றோர் அவை நின்று உரையாற்றி வெல்ல நினைப்பது,  ஆடுகளமின்றிக் காய்களை உருட்டுவது போன்றதாம்.
“ கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
 பேதையான் வீழ்வானேல் கால் முரியும்.” – நான்மனிக்கடிகை.

கல்னியறிவு உடையோன் தளர்வானேல் எப்படியேனும் உய்வான் ; கல்லாத பேதை தளர்வானேல் முயற்சி கெட்டு அழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக