ஞாயிறு, 11 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 406

திருக்குறள் – சிறப்புரை : 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். – 406
கல்லாதவர்கள் உயிரோடு இருக்கிறார்களேயன்றி அவர்கள் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை ; அவர்கள் தமக்கும் பிறருக்கும்  பயன்படாமையால்  விளையாத களர் நிலம் போல்வர்.
“ எல்லாவிடத்தும் கொலை தீது மக்களைக்
 கல்லா வளரவிடல் தீது….  நான்மணிக்கடிகை.

எவ்வகையிலும் ஓர் உயிரைக் கொல்லுதல் தீது ; பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்காமல் வளர்த்தல் தீது.

1 கருத்து: