வியாழன், 29 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 419

திருக்குறள் – சிறப்புரை : 419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419
அரிய கருத்துகளைச் செவிமடுத்துக் கேட்டறிந்தவர்களைத் தவிர பிறர் பணிவான சொற்களைக் கூறும் வாயினை உடையராதல் அரிது.
“ கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
 அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். …. வாக்குண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக