சனி, 10 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 405

திருக்குறள் – சிறப்புரை : 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். – 405
கல்வியறிவு இல்லாத ஒருவன் தனக்கு எல்லாம் தெரியும் என்று கொள்ளும் தன்மதிப்பு.. கற்றார் முன்னிலையில் உரையாடக் கெடும் என்பதாம்.
“ கைஞ் ஞானம்கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
  சொல் ஞானம் சோரவிடல்.” …..… நாலடியார்.

அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே .. நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக