சனி, 17 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 407

திருக்குறள் – சிறப்புரை : 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.- 407
சான்றோர் செய்யுள் கருத்துக்களை ஆழ்ந்து ஆராயும் அறிவாகிய அக அழகு இல்லாதவனுடைய எழில் நலமாகிய புறத்தோற்றம் மண்ணால் புனையப்பட்ட பாவையின் அழகிய தோற்றம் போலதாம்.
(மண்ணால் புனையப்பட்ட பாவை வடிவானது அழகுடையது என்றாலும் அஃது உயிரற்றது காற்றாலும் மழையாலும் அழியும் தன்மையுடையது.)
“ கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

 நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே.” …… வெற்றி வேற்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக