ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…70.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…70.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”வாய்ப் பறை ஆகவும் நாக்கு அடிப்பாகவும்

சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்.”

முரசு அடித்து ஊரின் நடுவே நின்று ஒருவன் கூறும் செய்தியை உற்றுக் கேட்கும் ஊரினர் போல், தம்முடைய வாயை ஒலிக்கும் பறையாகவும், அப்பறையை அடித்து முழக்கும் கம்பாக தம் நாக்கையும் கொண்டு  சான்றோர் பலகாலும் உரக்கக் கூறும் செய்திகளைக் காது கொடுத்துக் கேட்பீர்களாக.

“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்

நன்று அறி உள்ளத்துச் சான்றோர்…” – அரிசில் கிழார், பதிற்றுப் பத்து : 72.

மக்கள் அனைவரையும் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும்  அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர் மொழிகளைப் போற்றி வாழுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக