வியாழன், 22 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…88.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…88.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

உருவத்தைக் கண்டு இகழாதே

”உடலின் சிறுமை கண்டு ஒண்புலவர் கல்விக்

கடலின் பெருமை கடவார் – மடவரால்

கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்

விண் அளவாயிற்றோ விளம்பு.”

 

”பெண்ணே….. கதிர் ஒளியின்வரவால் மிகப்பெரிய இயற்கை,செயற்கை எழிலைக் காட்டும் கருமணியின் உருவம் சிறிய கண்ணின் அளவாகத்தானே இருக்கும். ஆதலால், உருவத்தில் சிறியவர் என்று கருதி அவரிடம் கடல் அளவு உள்ள அறிவின் ஆற்றலை எவரும் இகழ்வாரோ..?

 

”உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.-குறள்: 667.

 

ஊர்ந்துவரும் பெரிய தேர்ச் சக்கரத்திற்கு உதவும் அச்சில் பொருத்தப்பட்டுள்ள  சிறிய ஆணியைப்போலச் சான்றோர் பலரைக் கொண்டுள்ளது இவ்வுலகம் ஆதலால், உருவில் சிறியவர் என்று உடலின் சிறுமை கண்டு எவரையும் இகழந்துவிடக்  கூடாது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக