சனி, 17 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.

“இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று

எல்லாம் இருந்து அவனுக்கு என் செய்யும் – நல்லா

மொழி இலார்க்கு ஏது முது நூல் தெரியும்

விழி இலார்க்கு ஏது விளக்கு.”

நற்குணம் உடைய பெண்ணே ….!

 

வாய் பேச இயலாதவனிடம் சிறப்பு வாய்ந்த பழைய நூல் இருந்தும் பயனில்லை ; கண் பார்வை இல்லாதவன் முன்னே விளக்கு இருந்தும் பயனில்லை ;  அவ்வாறே, உயிர்களிடத்து அன்பு இல்லாதவனிடம் வசதியாக வாழ்வதற்குரிய இடமும், பொருளும் ,  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள்களும்  இன்ன பிறவும் இருந்தாலும் பயனில்லை.

 

“அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை.” – நல்லந்துவனார், கலித்தொகை:133.

அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக