சனி, 10 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…76.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…76.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி

நட்பின் சிறப்பு

“நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

நோக்கின் அவர் பெருமை நொய்தகும் – பூக்குழலாய்

நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மை நிலை போம்.”

 

பூ மணக்கும் கூந்தலை உடைய பெண்ணே…! நெல்லின் மேல் கூடி இருக்கும் உமி சிறிதளவு நீங்கிப் பிறகு கூடினாலும் அது, முளைத்தற்குரிய வலிமையை இழந்துவிடும். அதுபோல, ஒருவரை ஒருவர் பிரியாது நட்புடன் இருக்கும் நண்பர்கள் சூழ்நிலையால் சிறிது காலம் பிரிந்திருந்து பின் மீண்டும் கூடினாலும் அவ்விருவரின் நட்பு முன்பு போல் இல்லாது குறைந்தே காணப்படும்.

 

“கோட்டுப் பூப் போல மலர்ந்து பின் கூம்பாது

வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி…”-சமண முனிவர்கள் : நாலடியார்; 22.5.

மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரும் மலரைப்போல, இறுதிவரையிலும் விருப்பத்துடன் தொடர்வதே நட்பின் சிறப்பாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக