திங்கள், 19 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…85.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…85.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

இனியவை கூறல்.

“இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே – பொன்செய்

அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்ணென்

கதிர் வரவால் பொங்கும் கடல்.”

ஒலிக்கின்ற அழகிய வளையல் அணிந்த  பெண்ணே….! குளிர்ச்சி தரும் நிலவின் ஒளிமுகம் கண்டே கடல் பொங்கும் ஆனால், கடும் வெப்பத்தை உமிழ்கின்ற சூரியன் வரவால் கடல் பொங்காது. அதுபோல,   நிறைந்த நீரால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும்    மக்கள் மனம் குளிர இனிய சொற்களைக் கேட்டே மகிழ்ச்சி அடைவர்; கடுஞ் சொற்களைக்கேட்டு ஒருபோதும் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்.

“முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனிதே அறம்.- குறள்:93.

முகமலர்ச்சியோடு இனிதாக ஒருவரைப் பார்த்து மனம் மகிழ்ந்து இனிய சொற்களைச் சொல்வதே அறம் எனப்படுவதாகும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக