ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…77.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…77.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

இல்லறமே நல்லறம்.

“காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்

தீதுஇல் ஒரு கருமம் செய்பவே – ஓதுகலை

எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்

கண்ணிரண்டும் ஒன்றையே காண்.”

 

 நிலவு போன்ற முகத்தை உடையவளே..! கண்கள் இரண்டும்  தனித்தனியே இரண்டு காட்சிகளைக் காணாமல்  ஒரே பொருளைக் காண்பது போலக் இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும் தம்முள் மாறுபாடு கொள்ளாமல் நல்லது கெட்டது எதுவாயினும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து  ஒத்து உணர்ந்து இல்லறக் கடமைகளைச் செய்தல் வேண்டும்.

 

“மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்

முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை.- ஐயூர் முடவனார், புறநானூறு: 314.

ஒளி பொருந்திய நெற்றியை உடைய அவளோ இல்லத்திற்கு விளக்காகத் திகழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்குபவள் , அவள் கணவனோ வெற்றியைத்தரும் வேல் ஏந்திப் பகைவர் படை எனும் வெள்ளத்தைக் கற்சிறை ( கல்லணை) போல் ஒருவனாய் நின்று தடுத்து நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக