செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…72.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…72.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்

பொய் போலும்மே பொய் போலும்மே”

சான்றோர் நிறைந்த  நீதிமன்றத்தின் முன்  உண்மையை உரத்துக்கூறும் சொல் வன்மை இல்லாமயால் , உண்மையும் பொய் போலத்  தோன்றக்கூடும். ஆயினும் உண்மை ஒரு போதும் சாவதில்லை; பொய்தான் விரைந்து அழியும்.

“ வாழ்தல் வேண்டிப்

பொய் கூறேன் மெய் கூறுவல்… “ – மருதனிள நாகனார், புறநானூறு: 139.

உயிர் வாழ வேண்டிப் பொய் சொல்ல மாட்டேன் ; உண்மையே பேசுவேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக