சனி, 24 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…90.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…90.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

நல்லவர் நட்பு நன்மை தரும்.

“நல்லோர் செயும் கேண்மை நாடோறும் நன்றாகும்

அல்லார் செயும் கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்

காய் முற்றின் தந்தீங் கனியாம் இளந்தளிர்நாள்

போய் முற்றின் என்னாகிப் போம்.”

 

நற்குணம் உடைய பெண்ணே கேட்பாயாக….!  காய் முற்றினால் இனிய சுவை உடைய நல்ல பழம் கிடைக்கும்; இளந்தளிர் பல நாள்கள் கடந்து முற்றினால் பயன் இல்லையே ! அவைபோல,  நல்லோரிடம் கொள்ளும் நட்பு நாள்தோறும் இனிதாக வளர்ந்து நன்மை தரும் ; தீயோரிடம்  நட்புக் கொண்டால் நாள்தோறும் வளராது தீமையே செய்யும்.

 

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு “ –குறள்: 783.

 

நூலின் நற்பொருளைக் கற்க கற்க மேன்மேலும் இன்பம் தருதல் போன்று, பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பும் இன்பம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக