வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…89.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…89.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

மேன்மக்கள் நற்பண்பு.

”முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்

கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்

காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து

ஆயினும் ஆமோ அறை.”

 

வாழை, காயாக இருக்கும் போதும் பயன்படும்; எட்டிக்காய் பழுத்திருந்தாலும் அது பயன் படாது. அவைபோல, அறிவிற் சிறந்த பெரியோர் சினம் கொண்ட போதிலும் இல்லாதவர்க்கு வேண்டியதைக் கொடுத்து உதவுவர். ஆனால் கயவர்கள் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் போதும் பிறர்க்கு எதுவும் கொடுத்து உதவமாட்டார்கள்.

 

”இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு

ஈவோர் உண்மையும் காண்..”- பெருஞ்சித்திரனார், புறநானூறு: 162.

 

இரப்போர் இருத்தலும் உண்மை ; இரப்போர்க்குக் கொடுப்போர் இருப்பதும் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக