சான்றோர் வாய் (மை) மொழி :
142. அறிவியல்
சிந்தனைகள் - மார்க்சீயம் – மதம் – கடவுள்.
” மதம் என்பது தன்னைத் தானே அறிந்துகொள்ளாத் அன்றேல்
தன்னை மீண்டும் இழந்துவிட்ட மனிதனின் சுயபிரக்ஞையும் சுய உணர்வுமாகும்.. ஆனால் மனிதன் என்போன் இந்த உலகத்துக்கு அப்பாலே குந்தியிருக்கும் ஒரு கருத்துப்
பொருளன்று. மனிதன் என்பது மனிதனின் உலகமே, அரசு; சமுகம்
தான் மனிதன். இந்த அரசு, இந்தச் சமுகம்
மதத்தை உண்டாக்குகிறது. மதம் என்பது மறுதலையான (தலைகீழான) உலகப் பிரக்ஞையாகும். ஏனெனில் மதத்தில் தலை கீழான ஒரு உலகமே காணப்படுகிறது. மதம் அந்த உலகில் பொதுக்கொள்கையாகும். மதம் மக்களின் அபின் .
மதம் அவலம் (அதாவது மதத்தில் இடம் பெறும் ஆத்ம அவலம் ) என்பது
ஒரு வேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்படையாகவும் ; அந்த உண்மையான அவலத்துக்கு எதிரான
எதிர்ப்பாகவும் அமைகின்றது. மதம் என்பது ஆத்ம உயிர்ப்பற்ற ஒரு நிலைமையின் உயிர்ப்பாக
இருப்பது போல் ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெரு மூச்சாக இதயமற்ற உலகில் இதயமாக உள்ளது .”
. – காரல் மார்க்சு. ……………………..தொடரும்……………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக