சான்றோர் வாய் (மை) மொழி :
148. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி .
ஹோமர் – கி.மு. 700.
இவர் கவிதைகளில் இடம்பெற்றிருந்த அறிவியல் கருத்துகள், பின் தோன்றிய
கிரேக்க அறிவியல் சிந்தனைகளுக்கு அடிப்படையாக
அமைந்ததென்பர்
தொல்காப்பியர்-
கி.மு. 711.
இவர் இயற்றிய
தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கணமும் இலக்கியமுமாகும்.
எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. தொல்காப்பியர் எழுத்தில் ஒரு மொழியியல் விஞ்ஞானியாக ; பொருளில் – ஒரு சமுகவியல் விஞ்ஞானியாக ; மரபியலில்
– ஓர் உயிரியல் விஞ்ஞானியாக விளங்குகிறார்.
உயிர்களில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை உலகுக்கு வழங்கிய
சி. ஆர். டார்வினுக்கு (Charles Robert
Darwin – 1809 – 1882.) ஆய்வு முன்னோடி தொல்காப்பியரே . தொல்காபியர் கோட்பாடுகளைப் பின்னாளில் இரசிய விஞ்ஞானி சேச்னோவ் (Sechano -1829 – 1905.) பிராணிகளின் புலன்
உணர்வுகள் குறித்த விஞ்ஞானத்தில் விளக்கங்
கண்டார்.
கி.பி. முதல் நூற்றாண்டில் தோன்றிய சங்க இலக்கியங்களில் உள்ள அறிவியல் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. புறநானூறு கூறும் ஐம்பெரும்பூததியற்கையும், செஞ்ஞாயிற்றுச் செலவைக்
குறிப்பிடும் (புறம்.30) பாடலும் . மேலும் அறிய (பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் எனும் என்நூலினை
அமேசான் கிண்டில் காணவும் ) வள்ளுவர் கூறும் ‘சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம் ‘
எனக்கூறும் குறளும் அறிவியல் சிந்தனை விருந்தன்றோ..!
லியானர் டாவின்சி (Leonardo Da Vinch -1452 -1519.) என்ற புகழ்பெற்ற
இத்தாலிய ஓவியர் வரைந்த பல ஓவியங்கள் பின்னாளில் அறிவியல் கண்டுபிடிப்புகளாக உருவாயின.
பிரான்சிஸ் காட்வின் -: 1658இல் எழுதிய ’சந்திரனில் மனிதன்’ என்னும் நாவல்
, 1969இல் நிலவில் மனிதன் காலடி வைத்ததன் மூலம்
மெய்யானது.
எச்.ஜி. வெல்ஸ் : - (H.G. Wells – 1866 – 1946. )ஒரு
சிறந்த நாவலாசிரியர். இவரின் அறிவியல் கற்பனைகள் அறிவியல் வழி மெய்ப்பிக்கப்பட்டன.
இ.காண்ட்: (I. Kont-
1724 – 1804.) இவர் செர்மானிய தத்துவ மேதை, இவர் 1775இல் முவைத்த சீரிய மண்டலம் குறித்த
கருதுகோள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கணிதவியல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.
பாரதியார்; 1882 -1921. இவர் “சந்திர மண்டிலம் கண்டு
தெளிவோம்” என்று 1916இல் பாடியது, 1961இல்
இரசிய விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப்பட்டது.
அறிவியலில் கலை:
…………………..தொடரும்……………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக