வெள்ளி, 30 அக்டோபர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2

பதிற்றுப்பத்து – அரிய செய்தி
உரையாசிரியர் முனைவர் அ. ஆலிஸ்
இரண்டாம் பத்து – குமட்டூர்க் கண்ணனார்

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2
முருகனின் ஊர்தி – யானை
சூருடை  முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11: 5-6
 சூரபதுமனாதன் தன்னையை உடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும் புகழையும் மிகுந்த சினத்தினையும் வெற்றியினையும் கொண்ட முருகப் பெருமான் தனக்குரிய ஊர்தியாகிய யானையின் மீதேறி அதனைச் செலுத்தினது போல ….
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 2
வட இமயம் தென் குமரி
 ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.
   குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11:  23 - 25


அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும்  பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும் – தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் – செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின் எல்லை அறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக