சனி, 31 அக்டோபர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4
விருந்து – உணவு
 தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மையூன்  பெய்த வெண்ணெல் வெண்சோறு
 நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.12 :  15 – 18
  சுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசியால் வருந்திய துன்பம் உடையர்  - அவ்வருத்தம் தொலையுமாறு நின் ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு கூடிய கொழுவிய துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன வெண் சோற்றினைப் பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர். ( நனையமை கள் என்றது  தென்னை – பனை – ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் அமைக்கப்படும் கள்.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 4
மழைக் கோள்
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
 குமட்டூர்க் கண்ணனார். பதிற்.13  :  25 – 28
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் சுக்கிரன் கோள் செல்லாமல் – மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்து வரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்குகின்றன.( மழைக் கோளாகிய வெள்ளி – செவ்வாயுடன் சேர்ந்தால் மழை இலதாகும் என்பது வானியல்  அறிவியலா – ஆய்க.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக